Monday, March 28, 2011
மக்கள் தலைவர்
புதுவையில் பூத்த பொதுமை மனத்தர்!
புதுமையை நாடிய புரட்சி வீரர்!
நாட்டுப் பற்றும் நற்றமிழ்ப் பற்றும்
கூட்டாய்ச் சேர்ந்த கொள்கைச் சீலர்!
கெடுதலை அறியாக் கேண்மைய ராகி
விடுதலை வேள்வியில் விளங்கிய வித்தகர்!
ஆன்ற அறிவும் ஆய்வுத் திறனும்
சான்ற நெறியும் சால்புடன் பெற்றவர்!
பண்பும் அன்பாய்ப் பழகும் தன்மையும்
தன்பால் கொண்டவர் தலைவர் சுப்பையா!
ஒடுக்கப் பட்டார் உயர வேண்டி
அடுக்கடுக் காக அரும்பணி செய்தவர்!
ஆலைத் தோழரின் அவல நிலையை
சீல முடனே தீர்த்து வைத்தவர்!
தேச பக்தி! தெளிந்த சிந்தனை!
மாசில் லாத மனத்தைக் கொண்டவர்!
பாட்டாளி வர்க்கக் கூட்டாளி யாக
நாட்டில் திகழ்ந்த நல்ல தலைவர்!
சுயநல மற்ற சுதந்தர மறவர்!
பயமறி யாத பண்பினர் சுப்பையா!
நல்லவர் வல்லவர் நாட்டுக் குழைத்தவர்!
வெல்லும் தமிழ்போல் வெற்றி கண்டவர்!
எக்குலத் தாரும் இனிதாய்ப் போற்றும்
மக்கள் தலைவர் மாண்பார் சுப்பையா!
நெஞ்சுள் வாழும் அஞ்சா அகத்தரின்
விஞ்சும் புகழை வியந்துரைப் போமே!
08.01.2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment